shadow

சென்னையில் மீண்டும் புயல் வருமா? பஞ்சாங்கத்திற்கு நேர்மாறாக வானிலை அறிக்கை
rain
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் பஞ்சாங்கத்தின்படி வரும் 21ஆம் மீண்டும் சென்னையில் புயல் வரும் என செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இப்போதைக்கு அடுத்த புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும், வானத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து சுமாரான மழை மட்டும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து தாழ்வு நிலையாக மாறியுள்ளதால், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஞ்சாங்கத்தின்படி கண்டிப்பாக சென்னையில் புயல் வரும் என பிரபல ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் வானிலை அறிக்கை, பஞ்சாங்கம் இவற்றில் எது உண்மை என்பது தெரிந்துவிடும்.

Leave a Reply