shadow

modi and merkel
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 13ஆம் தேதி பிரேசில் செல்கிறார். பிரேசிலுக்கு செல்லும் வழியில் அவர் முந்தைய நாள் இரவில் ஜெர்மனியில் தங்க திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சந்திப்பு நடத்த திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா, பிரேசிலில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனி அணி ஆடும் ஆட்டத்தை பார்ப்பதற்காக செல்லவிருப்பதால் இந்திய பிரதமரின் சந்திப்பை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி அவர்களும் பிரேசில் நாட்டில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தை பார்க்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. எனவே பிரதமரின் இந்த பயணத்தில் ஜெர்மனி அதிபருடனான சந்திப்பு இல்லை என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply