ஜன்னல் இருக்கைக்கு கூடுதல் கட்டணமா? ரயில்வே துறை விளக்கம்
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஜன்னல் இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. இதனால் இந்த இரண்டுக்கும் கடும் போட்டி இருக்கும் நிலையில் ஜன்னல் இருக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் கூடுதலாக ரூ.50 கட்டணத்தை வசூல் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதுகுறித்து வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனில் சக்ஸேனா. ஜன்னலோர இருக்கை மற்றும் கீழ் படுக்கைக்கு குறைந்தபட்சம் ரூபாய் 50 க்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி தவறானது. அது வதந்தி என கூறி உள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.