ஸ்டாலினுக்கு மட்டுமே அந்த ஆசை உள்ளது. அமைச்சர் ஜெயகுமார்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு போதுமான மெஜாரிட்டியை இழந்துவிட்டதால் கவர்னர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். மேலும் விரைவில் தேர்தல் வரும் என்றும் அப்போது ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், ‘நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம், முன்கூட்டி தேர்தல் வராது. ஸ்டாலினை தவிர முன்கூட்டியே தேர்தல் வருவதை திமுக எம்எல்ஏக்கள் கூட விரும்பவில்லை. ஸ்டாலின் மட்டுமே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய கனவு பலிக்காது’ என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார் கூறுவது உண்மைதான் என்றும் திமுக எம்.எல்.ஏக்களில் பலர் தேர்தல் வருவதை விரும்பவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.