shadow

வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறுமா என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்ககடலில் 3வது காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக வாய்ப்பு இருந்தாலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஆனாலும் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக திருநெல்வேலி இராமநாதபுரம் தூத்துக்குடி மதுரை விருதுநகர் மற்றும் தென்காசி கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது