தமிழக மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சசிகலாவுக்கு முதல்வர் பதவி இல்லை
தமிழக முதல்வராக சசிகலா வந்துவிடக்கூடாது என்று கோடிக்கணக்கான தமிழக மக்கள் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த வேண்டுதல் கிட்டத்தட்ட பலித்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சசிகலா முதல்வராக பதவியேற்க வசதியாக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் தயார் செய்யப்பட்டு அதில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அனைத்து பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எனவே சசிகலா பதவியேற்பு இப்போதைக்கு என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.