அதிமுக ஆதரவு இல்லாமல் மத்திய அரசு இனி இல்லை: ராஜேந்திர பாலாஜி
மத்தியில், இனி, அதிமுக ஆதரவு தரும் கட்சி மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்றும், அப்போது, கண்டிப்பாக, மத்திய அமைச்சர் பதவியை கேட்டுப்பெறுவோம் என்றும், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநிலத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினைக்காக, இரும்பு மனிதர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் எம்.பிக்கள், 23 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கியதாக கூறினார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து, மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் அதிமுக எம்பிக்கள் மத்திய அமைச்சரவையில் அதிகம் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.