shadow

எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம். கனிமொழி கோரிக்கை

திமுக தலைவரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பிறந்த நாள் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 5ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. திமுக தொண்டர்கள் தற்போது போஸ்டர் அடித்து கனிமொழியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கனிமொழி எம்பி தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டு கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு எனது பிறந்த நாளை முன்னிட்டு, பரிசுப் பொருட்களையோ, பூங்கொத்துகளையோ அல்லது சால்வைகளையோ ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். அதற்கு பதிலாக தற்போது நடைபெற்று வரும் வெள்ள நிவாரண மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக நேரடியாக பங்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

எனது நலன் விரும்பிகள் விளம்பர தட்டிகள், பதாகைகள் அமைப்பதை விட்டு வெள்ள நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். கடந்த சில வாரங்கள் நம்மிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் தூண்டுவதாக இருக்கட்டும். இப்பேரழிவால் ஏற்பட்ட துயரங்களை களைவதில் நமது முயற்சிகளைத் தொடர்வோம் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply