ஆடிட்டருக்கு ஜாமீன், கார்த்திக் சிதம்பரத்திற்கு நோ: டெல்லி ஐகோர்ட்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணப்பறிமாற்றம் நடந்துள்ளதாக கூறி கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும், கடந்த மாதம் 15-ம் தேதி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
இதனை அடுத்து, அவர் 14 நாட்கள் விசாரணைக்காவலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி பாஸ்கரராமன் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதே வழக்கில் சி.பி.ஐ. ஆல் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.