ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுதலை செய்யப்பட்டு பாதுகாப்பாக இந்தியா திரும்பிய நர்ஸ்களுக்கு வேலைவாய்ப்பு தர இந்திய தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி, அவர்கள் முன்வந்து விளம்பரம் செய்துள்ளார். அவர் தனக்கு சொந்தமான மருத்துவமனைகளில் 46 நர்ஸுகளுக்கு வேலை தருவதாக உறுதியளித்துள்ளார். இதனால் நாடு திரும்பிய நர்ஸ்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி அவர்களுக்கு நேபால், பூட்டான், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் சொந்தமாக பல மருத்துவமனைகள் உள்ளன. நேற்று மலையாள பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்துள்ள அவர் நாடு திரும்பிய நர்ஸ்கள் அனைவரும் போதிய காலம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் பணிக்கு திரும்ப விருப்பப்படும்போது தன்னை அணுகலாம் என்றும், தனக்கு சொந்தமான ஏதாவது ஒரு மருத்துவமனையில் அவர்களின் திறமைக்கேற்ற ஊதியத்துடன் கூடிய பணி அளிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் வேலை இழந்து பெரும் சோகத்தோடு நாடு திரும்பிய நர்ஸ்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி எந்த காரணத்தை முன்னிட்டும் ஈராக் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் விமான நிலையத்தில் கூறினர்.
Leave a Reply
You must be logged in to post a comment.