கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் உள்ள கொதிகலன் இன்று திடீரென வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்து ஒன்றில் NLCயின் பொதுமேலாளர் பரிதாபமாக பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை நெய்வேலி 1வது அனல்மின் நிலையத்தில் உள்ள 7வது யூனிட்டில் வழக்கம்போல் மின் உற்பத்தி நடைபெற்றது. மின் உற்பத்தையை ஆய்வு செய்ய பொதுமேலாளர் செல்வராஜ் உள்ளே வந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென பெரும் சத்தத்துடன் கொதிகலன் வெடித்து, சம்பவ இடத்திலேயே பொதுமேலாளர் பலியானார். அவருக்கு அருகில் இருந்த 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்கள் முதலில் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவர்கள் சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து காரணமாக அனல்மின் நிலையைம் 1ல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.