நாளை நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி: அதிரடி உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதால் நாளை காலை 5.30 மணிக்கு கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது

நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பு வெளியாகியும் குற்றவாளிகள் தரப்பில் இருந்து மாறிமாறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களால் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது

இந்த நிலையில் குற்றவாளிகள் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப் பட்டதாகவும் இதனை அடுத்து நாளை காலை 5.30 மணிக்கு அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவது உறுதி என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது

Leave a Reply