நிர்பயா கொலையாளிகள் தூக்கிலிடும் தேதி?

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளை டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், தூக்கு தண்டனையை நிறைவேற்ற சிறப்பு காவலர்கள் வரவழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு கொளுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் நான்கு பேர்களும் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், நிர்பயா கொலையாளிகளுக்கும் விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply