நிர்பயா குற்றவாளிகளுக்கு சில நிமிடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றம்: பெரும் பரபரப்பு

கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவெற்றுவது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது

சற்றுமுன்னர் டெல்லி திகார் சிறையில் 4 குற்றவாளிகளுக்கும் கடைசி மருத்துவ பரிசோதனை நடந்ததாகவும், அந்த சோதனையில் 4 பேர்களும் நல்ல உடல்நிலையில் இருப்பதாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனை அடுத்து குற்றவாளிகள் நால்வரும் சற்று முன்னர் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நால்வரும் சரியாக 5.30 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிடப்படவுள்ளனர்.

Leave a Reply