டெல்லியில் பரபரப்பு

எஸ்ஜே சூர்யா நடித்த அன்பே ஆருயிரே என்ற படத்தில் அறிமுகமான நடிகை நிலாவின் தந்தையிடம் டெல்லியில் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நிலாவின் தந்தை இன்று அதிகாலை தனது டெல்லியில் உள்ள வீடு அருகே வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்

இதுகுறித்து நிலாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். நடிகை நிலா தனது டுவிட்டரில் தலைநகர் டெல்லியில் எனது அப்பாவிற்கு நடந்துள்ள இந்த சம்பவம் டெல்லி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது என்று குறிப்பிட்டு அந்த டுவிட்டை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply