புதிய தகவல்

அசோக்செல்வன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ மை காட்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் அசோக் செல்வன் கடந்த சில வாரங்களாக முன்னணி இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களிடம் பல கதைகளை கேட்ட நிலையில் தற்போது இயக்குனர் சுசீந்தரன் இடம் உதவியாளராக இருந்த சுவாதினி என்பவர் கூறிய கதை பிடித்து விட்டதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்

ரொமான்ஸ் மட்டும் காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அசோக்செல்வன் ஜோடியாக நிகாரிகா என்பவர் நடிக்கவுள்ளார் இவர் ஏற்கனவே தமிழில் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

அசோக் செல்வன் மற்றும் நிஹாரியா இணையும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெற இருப்பதாகவும் ஊரடங்கு உத்தரவு முடிவுக்குப் பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply