shadow

cricketஇலங்கைக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 134 பந்துகளில் 195 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதன் மூலம் அதிவேக இரட்டைச்சதத்திற்கான உலக சாதனையை நூலிழையில் அவர் தவறவிட்டார்.

இதற்கு முன்பு  153 பந்துகளில் நாதன் ஆஸ்டில் கடந்த 2002ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிவேக இரட்டை சதம் எடுத்து உலக சாதனை புரிந்தார். நேற்று மெக்கல்லம் கூடுதலாக 5 ரன்கள் எடுத்திருந்தால் இந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கும்.

இன்று தொடங்கிய நியூசிலாந்து- இலங்கை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று நியூசிலாந்தை பேட்டிங் செய்ய கோரியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 80.3 ஓவர்களில் 429 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Leave a Reply