உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: வங்கதேசத்தை பந்தாடியது நியூசிலாந்து
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்தது. 146 ரன்கள் இலக்கை நோக்கிய விளையாடிய வங்கதேச அணி 15.4 ஓவர்களில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததால் வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறுகிறது.
நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Chennai Today News: Newzeland beat Bangladesh by 75 runs
Leave a Reply
You must be logged in to post a comment.