shadow

மணம் முடித்த மறு நிமிடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட தம்பதி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் அதி தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவுக்கரம் நீண்டு கொண்டே வருகிறது.

இளைஞர்களில் இருந்து ஆரம்பித்த இந்த போராட்டம் தற்போது விவசாய தொழிலாளிகள், லாரி, வணிகர் சங்கங்கள், திரைத்துறையினர், ஐடி ஊழியர்கள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உள்பட பல அமைப்புகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன. மேலும் நாளை ஆட்டோ, வேன், கால் டாக்சி ஓடாது என தமிழக சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஈரோட்டில் திருமணத்தை முடித்த கையோடு புதுமணத் தம்பதியினர், மணக்கோலத்திலேயே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாட்டின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு மணமக்கள் நிற்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply