80 வயது முதியவர் தோற்றத்தில் பச்சிளங்குழந்தை. வங்கதேசத்தில் பரபரப்பு
வங்கதேச நாட்டில் பிறந்த ஒரு பச்சிளங்குழந்தை 80வயது முதியவர் போல தோற்றமளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண் சமீபத்தில் டெலிவரிக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், வெளியே வந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
80வயது முதியவர் போல் முகம் சுருங்கி கண்கள் சிவந்து காணப்பட்ட அந்த குழந்தையை பார்க்க அப்பகுதியினர் மருத்துவமனைக்கு குவிந்து வருகின்றனர்.
நான்கு மில்லியன் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இவ்வாறு அரிதாக பிறந்து வருவதாகவும், தன்னுடைய மருத்துவ அனுபவத்தில் இதுபோன்ற ஒரு குழந்தையை தான் பார்த்ததில்லை என்றும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.