shadow

சாகச நிகழ்ச்சியின் ஒத்திகையின்போது ஆற்றில் விழுந்த அமெரிக்க போர் விமானம்.
flight
அமெரிக்க கடற்படை வீரர்கள் தினம் விரைவில் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் ஒருவாரகால சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது சாகசத்தில் ஈடுபட்ட மூன்று விமானங்களில் இரண்டு விமானங்கள் புறப்பட்ட இடமான பார்மிங்டேல் விமான நிலையத்துக்கு  பத்திரமாக வந்து சேர்ந்தன. ஆனால், 2ஆம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட ‘பி-47, தண்டர் போல்ட்’ என்ற விமானம் மட்டும் திரும்பி வரவில்லை. இந்நிலையில், நியூயார்க் அருகேயுள்ள மான்ஹட்டன் பகுதியில் ஹட்சன் ஆற்றுக்குள் பாய்ந்து அந்த விமானம் மூழ்கியதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் உடனடியாக நேற்றிரவு படகுகளில் சென்ற மீட்புப் படையினர் அந்த விமானத்தை ஓட்டிச்சென்ற விமானியை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆமா; சுமார் 3 மணி நேர தீவிர தேடலுக்கு பின் அந்த விமானியின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது.

ஆற்றுக்கு மேலே பறந்தபோது அந்த விமானத்தில் இருந்து புகை வெளியேறியதாகவும், அதன் காரணமாக ஒருபக்கமாக சரிந்த நிலையில் பறந்துவந்த விமானம் ஆற்றுக்குள் பாய்ந்து, சில நொடிகளுக்குள் நீருக்குள் மூழ்கிப்போனதாகவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். இதுகுறித்து அமெரிக்க ராணுவம் விசாரணை செய்து வருகின்றது.

//www.youtube.com/watch?v=zJM53klUPKc

Leave a Reply