விரைவில் உதயமாகிரது தினகரன் பேரவை
சென்னை ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதில் இருந்து அதிமுகவில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். இரண்டு நாட்களில் சுமார் 200க்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுவிட்டதால் தினகரன் தனக்கென ஒரு பேரவையை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
விரைவில் தினகரன் புதிய பேரவை ஒன்றை தொடங்கவுள்ளதாகவும், அந்த பேரவையின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தினகரனின் பேரவைக்கு உறுப்பினர் சேர்க்கைப் படிவம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், பேரவைக்கு என்று தனி அலுவலகம் அமைக்கவும் டிடிவி தினகரன் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.