சாதித்தது இந்தியா: கொரோனாவை கண்டுபிடிக்க புதிய கருவி
புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றியவர்களை எளிதில் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த முடியும்
இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என்றும், ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும் என்றும் இந்த உபகரணத்தை கண்டுபிடித்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உபகரணத்தின் விலை ரூ.80 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.