இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு
சமீபத்தில் நடைபெற்ற ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் மேத்யூஸ் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் போர்டு புதிய கேப்டனை அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியில் டெஸ்ட் அணிக்கு சன்டிமாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிக்கு உபுல் தரங்காவும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 27 வயது தினேஷ் சன்டிமால் 36 டெஸ்ட், 128 ஒருநாள் மற்றும் 48 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். 32 வயது இடக்கை பேட்ஸ்மேனான உபுல் தரங்கா 27 டெஸ்ட், 207 ஒருநாள் மற்றும் 16 இருபது ஓவர் போட்டியிலும் ஆடி இருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.