shadow

காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை இதெல்லாம் நிறுத்தலாமே!

காவிரி மேலாண்மை வாரியம் குறித்த போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டி நடத்தினால், போராட்டம் திசை திருப்பப்படும் என்று ஒருசில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் மேலாண்மை வாரியம் வரும் வரை இதெல்லாம் நிறுத்தலாமே என்று நெட்டிசன்கள் ஐடியா கொடுத்துள்ளனர்.

*காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை டாஸ்மாக் கடையில் மது குடிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்கலாம்

* காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை புதிய திரைப்படங்கள் திரையிட மாட்டோம் என்று திரையுலகினர் போராடலாம்

* காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரையிலோ அல்லது குறைந்தபட்சம் ஒரே ஒரு நாளோ சாட்டிலைட் சானல்கள் தங்கள் ஒளிபரப்பை நிறுத்தலாம்

* அல்லது குறைந்தபட்சம் விளம்பரம் இல்லாமலேயே சாட்டிலைட் சேனல்கள் ஒளிபரப்பப்படலாம்

ஒரு நான்கு மணி நேர போட்டி நடைபெறுவதால் ஒரு போராட்டமே வலுவிழக்கும் என்றால் அந்த போராட்டம் அந்த அளவிற்கு பலவீனமானதா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

*காவிரி மேலாண்மை வாரியம் வரும் வரை டிவி சீரியல்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவிக்கலாம்.

Leave a Reply