சுகாதாரத்துடன் பிரசாதம்: நெல்லை, சங்கரன்கோவில் கோவில்களுக்கு சான்றிதழ்

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தரப்படும் பிரசாதம்தான் தமிழகத்திலே சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் என , இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அதேபோல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் பிரசாதம் தயாரிக்கும் கோவில்களில் இரண்டாம் இடத்திற்கான சான்றிதழ் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்கள் சுகாதரமான பிரசாதம் தயாரிக்கும் சான்றிதழ்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply