shadow

tirunelveliநெல்லை மற்றும் தூத்துக்குடி மாநகர மேயர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று தொடங்கிய நிலையில் இன்று திடீரென தேர்தல் ரத்து செய்யப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதே நாளில் சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மூன்று நகரமன்ற தலைவர் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களும் நடக்கவிருப்பதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஐந்து பதவிகளுக்காக போட்டியிடுபவர்கள் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கினர்.

இந்நிலையில், இந்த தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று திடீரென ரத்து செய்துள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிவடையாமல் உள்ளதால் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், புதிய கால அட்டவணையை வேறொரு தேதியில் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

Leave a Reply