shadow

anushkaஎஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படம் ‘பாஹுபாலி. ரூ.150 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்றும், முதல் பாகத்தில் தமன்னாதான் முக்கிய கேரக்டராக வருவதாகவும் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வதந்தி பரவியது. அனுஷ்காவின் பெரும்பான்மையான காட்சிகள் இரண்டாம் பாகத்தில்தான் உள்ளதாகவும் அந்த வதந்தி பரவியது.

ஏற்கனவே இந்த படத்தின் பல ஏரியாக்களின் உரிமைகள் விற்கப்பட்ட நிலையில் இந்த படத்தை வாங்கியவர்கள் இந்த வதந்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனுஷ்காவிற்காகத்தான் இந்த படத்தின் உரிமையை பெற்றதாகவும், அனுஷ்கா இல்லாத படம் எங்களுக்கு தேவையில்லை என்றும் கூறி கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதனால் சுமார் ரூ.100 கோடி ரூபாய் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். பாஹுபாலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா படம் முழுவதும் வருகிறார். இதுகுறித்து வெளியாகியுள்ள வதந்தியை நம்பவேண்டாம் என்றும், இந்த திரைப்படம் இந்திய திரையுலகில் ஒரு புதுமையான திரைப்படம் என்பதால் மாபெரும் வெற்றியடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply