ஒருசில மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 5000 பேர்: அதிர்ச்சியில் தமிழக அரசு

அவசரமான நிலை ஏற்பட்டால் அனுமதிபெற்று வெளியூர் அல்லது வெளி மாநிலம் செல்லலாம் என்று தமிழக அரசு இன்று காலை ஒரு உதவி எண்ணை அறிவித்து இருந்தது. 75300 01100 என்ற இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் இந்த எண்ணுக்கு பலர் தாங்கள் அவசரமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலம் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதாகவும் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ஆயிரம் பேர் வரை ஒருசில மணி நேரத்திற்குள் விண்ணப்பித்துள்ளதாகவும் சென்னை மாநகர காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

144 தடை உத்தரவையும் பின்பற்றி, விண்ணப்பித்தவர்களின் கோரிக்கையையும் சென்னை காவல்துறை எப்படி நிறைவேற்ற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply