நேரம் பட நாயகி நஸ்ரியா பிரபல இயக்குனர் பாசில் மகன் பகத் பாசிலை கடந்த மாதம் திருமணம் செய்திருந்தார். இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் இருவரும் அமெரிக்கா, மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு தேனிலவுக்கு செல்ல முடிவெடுத்து கடந்த வாரம் பயணமாகினர்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் முடித்துவிட்டு கிரீஸ் கிளம்ப தயாராக இருந்த நிலையில் பகத் பாசில் ஏற்கனவே நடிக்க ஒப்பந்தமாகி இருந்த இயக்குனர் சந்தோஷ் நாயரின் ‘மணிரத்னம்’ (Money Ratnam) என்ற படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதனால் உடனடியாக இந்தியா கிளம்பி வருமாறும் இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தது.
இதனால் தேனிலவை அரைகுறையோடு முடித்துவிட்டு பகத்பாசில் – நஸ்ரியா தம்பதியினர் கேரளா திரும்பியுள்ளதாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் கிரீஸ் செல்வார்கள் என்றும் நஸ்ரியாவின் தந்தை கூறியுள்ளார்.
பகத் பாசில், நிவேதா தாமஸ் நடித்து வரும் மணிரத்னம், த்ரில்லிங் படமாக உருவாகி வருவதாகவும், இந்த படத்தை இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் வெளியிட உள்ளதாகவும் இயக்குனர் சந்தோஷ் நாயர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.