ஜெயம் ரவியுடன் நயன்தாரா முதல்முறையாக ‘தனி ஒருவன்’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றார். இந்த படத்தில் நயன்தாரா ஐ.பி.எஸ் அதிகாரியாக போலீஸ் யூனிபார்ம் போட்டு நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயம் ரவியின் சகோதரர் ஜெயம் ராஜா இயக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜயசாந்தி போல அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற நயன்தாராவின் ஆசை இந்த படத்தில் நிறைவேற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக நயன்தாரா குதிரையேற்றம், மற்றும் ஸ்டண்ட் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி ஆகியவைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த படம் வெற்றி பெற்றால் இனி சாஃப்ட்டான காதல் வேடங்களை தவிர்த்துவிட்டு அதிரடி ஆக்சன் வேடங்களையே நயன்தாரா தொடர்வார் என கூறப்படுகிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் அரவிந்தசாமி, கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.