shadow

idhu-kathirvelan-kadhal-poster_13890782080பிரபல தமிழ் வார பத்திரிகை குழுமம் ஒன்றில் இருந்து வெளிவரும் வாரமிருமுறை பத்திரிகை ஒன்று நடிகை நயன்தாராவுக்கும், உதயநிதிக்கும் காதல் என்றும், திடீரென இருவருக்கும் இடையேயான காதல் முறிவடைந்ததால் இருவரும் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இது கதிர்வேலன் காதல், மற்றும் நண்பேண்டா ஆகிய இரண்டு படங்களிலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்த உதயநிதி, நயன்தாராவை மிக தீவிரமாக காதலித்ததாகவும், ஒரு கட்டத்தில் நயன்தாராவுக்கு அமெரிக்காவில் பலகோடி மதிப்பில் பங்களா ஒன்று வாங்கித்தர ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. முதலில் காதலை மறுத்த நயன்தாரா, பின்னர் கோடிக்கணக்கான பணத்திற்கு ஆசைப்பட்டு காதலிக்க ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் திடீரென கடந்த வாரம் இருவருக்கும் காதல் முறிந்தது என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

காதல் தோல்வியடைந்ததால் நயன்தாரா, கத்தியால் கையை கீறிக்கொண்டதாகவும், இந்த விஷயம் தெரிந்து பதறிய உதயநிதி, அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனைக்கு உதயநிதியை அழைத்து சென்று இரவோடு இரவாக சிகிச்சை கொடுத்து வீட்டிற்குகூட தெரியாமல் அனுப்பிவைத்ததாகவும் அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இருவருக்குமே நெருங்கிய நட்பு வட்டங்கள் இந்த செய்தியை மறுத்துள்ளன. நயன்தாரா, இதற்கு முன்னால் காதல் செய்தவரின் டாட்டுடை அழிப்பதற்காக செய்த சிறு அறுவை சிகிச்சையை வைத்து கத்தியால் கீறிக்கொண்டார் என்று கதை கட்டி விட்டுள்ளதாகவும், உண்மையில் காதல் என்றாலே அவருக்கு அலர்ஜி என்றும் அவருடன் சமீபத்தில் இரண்டு படங்களில் நடித்த நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்பது முழுக்கமுழுக்க ஒரு பொய் செய்தி என்றும், இந்த வார பத்திரிகைக்கு எதையாவது பரபரப்பாக அடிக்கடி கிளப்பிவிடுவதே வாடிக்கை என்றும், உதயநிதியின் நண்பேண்டா காமெடி நடிகர் கூறியுள்ளார்.

இந்த பிரபல வார இதழ் கடந்த காலங்களில் பெரியார் – மணியம்மையுடன், கருணாநிதி-குஷ்புவை ஒப்பிட்டு பிரச்சனையை கிளப்பியது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் “அடுத்த சூப்பர் ஸ்டார்” என்ற பிரச்சனையை கிளப்பி இருதரப்பு ரசிகர்களையும் டென்ஷனாக்கியது. பத்திரிகையின் விற்பனை குறையும்போது திடீரென இதுமாதிரியான கதையை கிளப்பிவிடுவதே இந்த பத்திரிகைக்கு வாடிக்கை என்று திரையுலகில் பலரும் மதிக்கும் ஒரு மூத்த நடிகர் கூறியுள்ளார்.

Leave a Reply