நயன்தாராவுக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு ஏற்கனவே இரண்டு காதல்கள் தோல்வியில் முடிந்தது. முதலாவதாக சிம்புவை காதலித்தார். அது முறிந்ததும் பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரான நிலையில் அதுவும் தோற்றது. இதனால் விரக்தியானார். இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார்.
நயன்தாராவுக்கு வயதாவதால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் விரும்பினர். அதற்கு நயன்தாராவும் சம்மதித்தார். மாப்பிள்ளை பார்க்கும் முடிவை பெற்றோரிடம் விட்டு விட்டதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது பொருத்தமான மாப்பிள்ளையை பெற்றோர் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.
சினிமாவில் தொடர்பு இல்லாத வரனை பார்க்கும்படி கூறி இருந்தாராம். அப்படிப்பட்டவரையே பெற்றோர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டாக்டரா? என்ஜினீயரா? தொழில் அதிபரா? போன்ற எந்த விவரமும் தெரியவில்லை. கேரளாவைச் சேர்ந்தவர் என்கின்றனர். மம்முட்டியுடன் மலையாள படமொன்றில் நடிக்க நயன்தாரா கேரளாவில் தங்கி இருக்கிறார். அவரும் மாப்பிள்ளையை பார்த்து விட்டார் என்கின்றனர். விரைவில் திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.