நயன்தாரா காட்டில் பெய்யும் விடாத மழை. போட்டி நடிகைகள் அதிர்ச்சி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் ஆவதால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதிலும் வரும் வாய்ப்புகள் அனைத்துமே நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே வருவதால் அவருடைய போட்டி நடிகைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
நயன்தாரா நடித்து வரும் அறம், டோரா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளாக இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் ‘கொலையுதிர்க் காலம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது அவருக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது
‘யாமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டிகே இயக்கவுள்ள அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கான கால்ஷீட் தேதிகள் இறுதி செய்யப்பட்டவுடன் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து நயன்தாரா காட்டில் அடைமழை பெய்து வருவதால் அவருடைய போட்டியாளர்கள் பொறாமையுடன் கூடிய அதிர்ச்சியில் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.