shadow

nayanநடிகை நயன்தாரா அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவதையே வழக்கமாக கொண்டிருந்தார். சிம்புவுடனான நெருக்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ, பிரபுதேவாவுடனான காதல் என்ற கசப்பான சம்பவங்களுக்கு பின்னர் அவர் தன்னுடைய நடிப்பு தொழிலை மட்டுமே கவனமாக பார்த்துக்கொண்டிருப்பதாக கூறப்பட்டது. சமீபத்தில் அவரை பற்றிய எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயங்களும் வெளிவராத நிலையில் தற்போது நயன்தாரா டாஸ்மாக் கடை ஒன்றில் பீர் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் பரபரபை ஏற்படுத்தி வருகிறது.

இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் நயன்தாரா டாஸ்மாக் கடையில் மூன்று பீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்கின்றார். பக்கத்தில் பலர் நின்றிருக்கும் நிலையில் அவர் எந்தவித பதட்டமும் இன்றி வாங்கிக்கொண்டு சென்றதை அங்குள்ள பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கடையில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்று காலை முதல் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது. ஆனால் இந்த காட்சி விஜய் சேதுபதி, நயன் தாரா நடித்து வரும் ‘நானும் ரவுடிதான்’ படத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு காட்சி என்றும் கூறப்பட்டு வருகிறது.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1uqwz7n” standard=”//www.youtube.com/v/F7FXfnkVCBs?fs=1″ vars=”ytid=F7FXfnkVCBs&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep7798″ /]

Leave a Reply