‘ஐ’ என்ற பிரமாண்டமான படத்திற்கு பின்னர் ’10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வரும் சீயான் விக்ரம், அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தை அரிமா நம்பி’ பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் புலி படத்திற்கு பின்னர் விஜய் நடிக்கவுள்ள அட்லி படத்தில் நடிக்கவே கால்ஷீட் இல்லை என்று கூறிய நயன்தாரா விக்ரமுக்கு கால்ஷீட் கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த பத்து வருடங்களாக நயன்தாரா கோலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த போதிலும் இதுவரை விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா ஒரு படத்தில்கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008 ஆம் ஆண்டில் ஒரு படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதால் இருவரும் ஜோடி சேரமுடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.