முதன்முறையாக இணைந்த நயன்தாரா-தமன்னா
கோலிவுட் திரையுலகின் இரண்டு முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் தமன்னா முதன்முறையாக தமிழ், இந்தி என தயாராகும் படத்தில் நடிக்கின்றனர். ஆனால் இருவரும் ஒரே படத்தில் நடிக்கவில்லை. தமிழில் தயாராகும் படத்தில் நயன்தாராவும் இந்தியில் தயாராகும் படத்தில் தமன்னாவும் நடிக்கின்றனர்
யுவன்ஷங்கர் ராஜா இசை மற்றும் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொலையுதிர்க்காலம்’. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கொலையுதிர்க்காலம்’ படத்தை ‘உன்னைபோல் ஒருவன்’, ‘பில்லா’ ஆகிய படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். இந்தி இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.