நியூயார்க் நகரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க சில மணி நேரத்துக்கு முன்பு  டிவி நிருபர்களுடன்  பேசிக்கொண்டிருந்தார் நவாஸ் ஷெரீப். அப்போது  அமெரிக்க அதிபர் ஒபாமாவை மன்மோகன் சந்தித்து பேசிய விஷயம் பற்றி பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே இருந்த நவாஸ் ஷெரீப்  குறுக்கிட்டு, ‘மன்மோகன் சிங் பேச்சு வார்த்தையின் போது ஒபாமாவிடம் தீவிரவாதம் பற்றி சொன்னது, எனக்கு கிராமத்து முதிய பெண் புலம்பல் தான் நினைவுக்கு வந்தது என்று சிரித்தபடி குறிப்பிட்டார். இப்படி அவர் கூறியபோது, பாகிஸ்தான் ஜியோ டிவியின் ஹமித் மிர், என்டிடிவி நிருபர் பர்க்கா தத் உட்பட சிலர் இருந்தனர். டெல்லி டிவி ஒன்றுக்கு இதுதொடர்பாக மிர் கருத்து கூறியபோது இதை உறுதி செய்தார்.

மன்மோகன் சிங் பற்றி நவாஸ் இப்படி  கிண்டல் அடித்தது எதிர்கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டெல்லியில் பிரமாண்ட பேரணியில் பேசும் முன் நேற்று பாஜக  பிரதமர் வேட்பாளர் மோடி, ‘இப்படி ஒரு பிரதமர் நமக்கு: நவாஸ் இப்படி கிண்டல் அடித்திருப்பதை ஏற்க  முடியாது. கடுமையாக கண்டிக்க வேண்டும்’ என்றார்.

Leave a Reply