shadow

வாஜ்பாயின் முதுகில் குத்தியது உண்மைதான். பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்
nawas
கடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுக்கு சென்றார். பாகிஸ்தானின் லாகூர் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருநாட்டு பிரதமர்களால் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தான ஒருசில நாட்களில்தான் கார்கில் ஊடுருவல் நடைபெற்றது. அந்த நிலையில் நவாஸ் ஷெரிப்பை தொடர்பு கொண்டு பேசிய வாஜ்பாய், பாகிஸ்தான் தனது முதுகில் குத்திவிட்டதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து தற்போது பேரணி ஒன்றில் பேசிய நவாஸ் ஷெரிப், வாஜ்பாய் அப்போது கூறியது உண்மைதான். நானும் அதை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கார்கில் ஊடுருவல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கூறிய இந்த கருத்து பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. நவாஸ் ஷெரிப் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகவும், இதுபோன்ற நேரங்களில் அவர் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கருத்து கூறியுள்ளன.

Leave a Reply