shadow

81c84bf9-3d87-4739-977b-0224cd22c943_S_secvpf

தேவையான பொருட்கள்:

நாட்டுக்கோழி – அரை கிலோ,
தக்காளி – 150 கிராம்,
சின்ன வெங்காயம் – 200 கிலோ,
பட்டை, சோம்பு – சிறிதளவு,
மஞ்சள்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
தனியா தூள் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்,
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்,
பூண்டு – 10 பல்,
எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

• நாட்டுக்கோழியை நடுத்தரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

• தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

• மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம்(பாதி) ஆகியவற்றை அம்மியில் வைத்து ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ளவும்.

• வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

• இத்துடன் நாட்டுக்கோழியையும் சேர்த்து வதக்கவும்.

• பிறகு, அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

• கறி நன்கு வெந்ததும் நசுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம் போட்டு இறக்கினால்… ‘கமகம’வென்று நாட்டுக்கோழி ரசம் ரெடி!

• இதை சூடான சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம். நாட்டுக் கோழி ரசம் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். 

Leave a Reply