shadow

விஜய்-59 படத்தில் இணையும் 2 முறை தேசிய விருது பெற்ற பிரபலம்

vijay59விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 1ஆம் தேதி ஆரம்பித்து விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தற்போது விஜய்யின் அறிமுகப்பாடல் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அறிமுகப்பாடலை பிரபல பாடலாசிரியரும், இரண்டு முறை தேசிய விருது பெற்றவருமான நா.முத்துகுமார் எழுதியுள்ளார். இந்த பாடல் மட்டுமின்றி இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் நா.முத்துகுமார்தான் எழுதவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நா.முத்துகுமார் ஏற்கனவே விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புலி’ படத்தின் அனைத்து பாடல்களையும் கவியரசு வைரமுத்து எழுதியதால் படத்தின் கதையோடு இணைந்து பாடல்களும் இடம்பெற்றதை புரிந்து கொண்ட விஜய், இனிமேல் தன்னுடைய படங்களின் அனைத்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியர்தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடவுள்ளதாகவும், அந்த பாடல் வித்தியாசமான முறையில் அமையும் வகையில் முத்துகுமார் எழுதவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். அட்லி இயக்கி வரும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிரார்.

Leave a Reply