பாரதிய ஜனதாவின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென்னிற்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்வேன் என அஸ்ஸாஅம் முதல்வர் தருண்கோகாய் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணவனின் துணை இல்லாமல்,45 வருடங்கள் தனிமையில் வாழ்ந்து வேதனையில் தவித்துக்கொண்டிருக்கும் யசோதா பென், பொறுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அவர் இத்தனை வருடங்களாக தன்னுடைய கணவர் நரேந்திரமோடிதான் என்பதை விளம்பரப்படுத்தவில்லை. அவரது மெளனத்திற்காகவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும். இதுகுறித்து இன்னும் 10 நாட்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன் என அஸ்ஸாம் முதல்வர் தருண்கோகாய் நேற்று தலைநகர் கெளஹாத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.
குஜராத் முதல்வர் மோடி, சமீபத்தில்தான் தனக்கு திருமணமானது என்றும், அவர் மனைவியின் பெயர் யசோதா பென் என்றும் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.