shadow

narayanasamy

3வது அணிக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என ராகுல்காந்தி கூறியுள்ள நிலையில் அவரது கருத்து எதிராக அக்கட்சியின் அமைச்சர் நாராயணசாமி பேசியதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

3வது அணிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். ஆனால் அவரது கருத்தை ராகுல்காந்தி மறுத்து எந்த காரணத்தை முன்னிட்டும்  காங்கிரஸ் ஆதரவு 3வது அணிக்கு இருக்காது என்றும், காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார்.

இந்நிலையில், சல்மான் குர்ஷித் மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரின்  கருத்து மாற்றாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க 3வது அணி ஆதரவு அளிக்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்குள்ளே ஒருமித்த கருத்து இல்லையென்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

Leave a Reply