shadow

70 வருடங்களாக பிரசவத்திற்கு உதவி செய்த பெண்ணுக்கு கிடைத்த பெருமை

நேற்று முன் தினம் மத்திய அரசால் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 97 வயது நரசாம்மா என்ற பெண்ணும் ஒருவர்

இவர் கடந்த 1940 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தையின் பிரசவத்திற்கு உதவி செய்தார். அந்த பிரசவம் சுகப்பிரசவமாக இருந்ததால் அதன் பின்னர் அவருடைய கிராமத்தில் எந்த பெண்ணுக்கு பிரசவம் என்றாலும் இவர்தான் பிரசவம் பார்ப்பார். அதுவும் பிரசவம் பார்ப்பதற்காக அவர் இதுவரை ஒரு நயாபைசா கூட வாங்கியதில்லை

70 வருடங்களாக இந்த சேவையை செய்து நூற்றுக்கணக்காம பிரசவங்களை பார்த்த நரசம்மாவுக்கு தற்போது கெளரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நரசம்மா அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply