shadow

ugandaஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் இரண்டு வயது பச்சிளங்குழந்தையை ஒரு பெண் ஈவு இரக்கமின்றி முரட்டுத்தனமாக அடித்த காட்சி ஒன்று அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில் உள்ள ஒரு பெற்றோர் தங்களுடைய இரண்டு வயது குழந்தையை கவனித்துக்கொள்ள ஒரு பெண்ணை நியமனம் செய்தனர். வீட்டில் யாரும் இல்லாத போது அந்த குழந்தைக்கு உணவு ஊட்டியுள்ளார். ஆனால் குழந்தை அழுதுகொண்டே உணவை சாப்பிட்டதால் எதிர்பாராத நிலையில் வாந்தி எடுத்துவிட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் குழந்தையை சோபாவில் இருந்து கிழே தள்ளி முரட்டுத்தனமாக அடித்துள்ளார். மேலும் அந்த குழந்தையை காலால் எட்டி உதைத்தும், குழந்தை மீது ஏறி நின்றும் கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த கொடூர காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீட்டிற்கு திரும்பிய குழந்தையின் பெற்றோர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”//bit.ly/1xSrVna” standard=”//www.youtube.com/v/Dy7L6G_tCKQ?fs=1″ vars=”ytid=Dy7L6G_tCKQ&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9248″ /]

Leave a Reply