shadow

மீண்டும் மதிமுகவில் நாஞ்சில் சம்பத்?

கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து விலகியிருந்த நாஞ்சில் சம்பத் மீண்டும் தாய்க்கழகமான மதிமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேற்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், \தேவைப்பட்டால் மக்களுக்காக வைகோவுடன் இணைந்து போராட என்று கூறியுள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பிதாமகன், கதாநாயகன் வைகோதான் என்றும் அவர் வைகோவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, நாஞ்சில் சம்பத் தனது டடுவிட்டரில், மக்கள் மன்றத்திலும், நீதி மன்றத்திலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இப்பொழுது நீதிமன்றத்தின் வாசலிலும் அரசாங்கத்தின் தாழ்வாரங்களிலும் தவம் கிடக்கிறது வேதாந்தா நிர்வாகம். இப்பொழுது மூடி இருப்பது இடைக்கால ஏற்பாடு என்று கூறியிருந்தார்.

மற்றொரு டுவிட்டில் இன்னொரு நாள் அது மூடப்படும் அப்போது ஸ்டெரிலைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள். குட்டிச்சுவர்கள் ஒருகாலமும் கோபுரம் ஆவதில்லை. குட்டை ஒருக்காலும் சமுத்திரம் ஆவதில்லை’ என்று வைகோவை புகழ்ந்திருந்தார்.

Leave a Reply