சிறுவயதில் மனைவியையும், குழந்தையையும் பிரிந்து சென்ற பகவான் புத்தரை கேள்வி கேட்காத இந்த சமூகம் நரேந்திர மோடியை மட்டும் கேள்வி கேட்பது ஏன்? என மொடியின் சகோதரர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் இளைய சகோதரர் பிரஹ்த் மோஇ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். சிறுவயதில் திருமணம் செய்து குழந்தை பெற்ற பகவான் புத்தர், மனைவியையும், குழந்தையையும் பிரிந்து காட்டிற்கு சென்றார். அவரை எல்லோரும் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றனர். அதேபோல் மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணத்துடன் மனைவியை பிரிந்து சென்ற மோடியை மட்டும் ஏன் குற்றவாளி போல் கேள்வி கேட்கிறீர்கள். நரேந்திர மோடி புத்தருக்கு சமமானவர். அவர் மனைவியை பிரிந்தது குறித்து கேள்வி கேட்க இங்கு எவருக்கும் உரிமை இல்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.
பகவான் புத்தருக்கு சமமாக மோடியை ஒப்பிட்டு பேசிய மோடியின் சகோதரர் பேட்டி, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.