மோடியின் நமோ செயலியில் இருந்து தகவல்கள் திருடப்படுகிறாதா? அமெரிக்க நிறுவனம் விளக்கம்
மோடியின் ஆப், பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு வைக்கப்படும் ஆப்பு என்று சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மோடியின் நமோ செயலி சர்ச்சை குறித்து அந்த நிறுவனத்தின் அமெரிக்க நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தனிநபர் அந்தரங்கம், பாதுகாப்பு, கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எழுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவதோ அல்லது வேடிக்கையாகவோ எதுவும் செய்வதில்லை; என்று கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.