shadow

நளினிக்கு மீண்டும் பரோல். இன்று மாலை வெளியே வருகிறார்.

nalini1ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த வாரம் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள 12 மணி நேரம் பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள தனக்கு 3 நாட்கள் பரோல் வேண்டும் என அவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று  நீதிபதி மாலா முன் இன்று விசாரணைக்கு வந்தது. மூன்று நாள் பரோல் அளிக்க போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து நளினிக்கு ஒரு நாள் பரோல் அளித்து நீதிபதி மாலா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை பரோல் தந்தையின் ஈமச்சடங்கில் கலந்து கொள்ள நளினி வெளியே வருகிறார்

Leave a Reply