சந்தானம் நடிக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோவாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன்
கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக இருந்த சந்தானம் ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் இருந்து ஹீரோவாக மாறியுள்ள நிலையில் தற்போது தில்லுக்கு துட்டு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ள இன்னொரு படத்திற்கு ‘சர்வர் சுந்தரம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனந்த் பால்கி இயக்கவுள்ள இந்த படம் நாகேஷ் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரீமேக் இல்லை என்றாலும், நாகேஷின் பேரன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இந்த டைட்டில் டைட்டில் அனுமதி பெற ஆனந்த் பால்கி சமீபத்தில் நாகேஷ் குடும்பத்தினர்களை சந்தித்தபோது நாகேஷின் பேரன் பிஜேஷ் இந்த படத்தின் ஒரு கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என கருதியதோடு அவரை உடனே ஒப்பந்தமும் செய்துவிட்டார். பிஜேஷ் இந்த படத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவராக அறிமுகமாகிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த ஆனந்த் பால்கிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக பிஜேஷ் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.